தனியார் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து

60பார்த்தது
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. 15 கி.மீ தூரத்திற்கு நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். பட்டாசுகள் தொடர்ந்து வெடித்து வருவதால் தீயணைப்புத் துறையினர் உள்ளே செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இங்கு வட மாநிலத் தொழிலாளர்கள் 10க்கும் மேற்பட்டோர் தங்கியுள்ளதால் தீயை அணைத்த பின்னரே உயிரிழப்பு உள்ளதா என்பது தெரியவரும்.

தொடர்புடைய செய்தி