அஞ்சல் அலுவலகத்தில் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தின் கீழ் ஐந்து ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ரூ.20,500 பெறும் புதிய திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. 60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் ஒய்வுபெற்ற பிறகு வழக்கமான வருமானத்தை இழக்கக்கூடாது என்பதற்காக இந்த திட்டம் அஞ்சல் துறையால் உருவாக்கப்பட்டுள்ளது. மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தை குறைந்தபட்சம் ரூ.1,000 முதலீட்டில் தொடங்கலாம். இந்த சேமிப்புத் திட்டம் இந்திய அரசால் நடத்தப்படுகிறது.