ரத்த ஆறு ஓடும்.. சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

64பார்த்தது
சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் போட்டிகள் நடத்தினால் ரத்த ஆறு ஓடும் என பாகிஸ்தானில் இருந்து அனுப்பியது போன்ற இமெயில் ஐடியில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் சூழலில் வெடிகுண்டு மிரட்டல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி