லீவு எடுக்காமல் வேலை செய்த நபர் பலி

59பார்த்தது
லீவு எடுக்காமல் வேலை செய்த நபர் பலி
சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள ஜோஷன் பகுதியில் உள்ள நிறுவனத்தில் அ'பாவோ என்ற 30 வயது நபர் தொடர்ந்து 104 நாட்கள் விடுமுறை எடுக்காமல் வேலை செய்ததால் உடல் உறுப்புகள் செயலிழந்து உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் வேலை செய்ய தொடங்கிய அவர் வார விடுமுறையை கூட எடுக்காமல் வேலை செய்துள்ளார். இந்நிலையில் கடந்த மே25 அன்று உடல்நிலை சரியில்லாமல் போனது. இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் கடந்த ஜூன் 1ஆம் தேதி உயிரிழந்தார்.

தொடர்புடைய செய்தி