ஈரோடு: சத்தியமங்கலத்தை சேர்ந்த சந்திரன் (23) - பிரியதர்ஷினி (19) இருவரும் காதலித்து கடந்த 7 மாதத்துக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், நேற்று முன் தினம் (மே.07)திருவிழாவிற்காக பிரியதர்ஷினியின் பெற்றோர் வீட்டிற்கு இருவரும் சென்றுள்ளனர். அங்கு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, நேற்று காலை தோட்டத்துக் கிணற்றில் இருவரும் பிணமாக மிதந்துள்ளனர். கிணற்றில் குதித்த பிரியதர்ஷினியை காப்பாற்ற சென்ற சந்திரனும் தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.