மத்தியப்பிரதேச மாநிலம் பாபல்பூர் மாவட்டத்தை அடுத்த தில்வாரா காவல்நிலைய பகுதியில் 14 வயது சிறுமியை மூன்று பேர் சில நாட்களுக்கு முன்பு கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். இந்த நிலையில், போலீசார் குற்றவாளிகளை கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான சுபம் ரசாக் சிறுமிக்கு தெரிந்தவர் என்று போலீசார் தெரிவித்தனர். மே 17ஆம் தேதி சுபம் ரசாக், சிறுமியை காரில் அழைத்துச் சென்று மேலும் இருவருடன் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்துள்ளார்.