சென்னை கோடம்பாக்கம் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் விழுந்த தனது ப்ளூடூத் Ear Buds-ஐ தேடிக்கொண்டிருந்த கல்லூரி மாணவர் மீது ரயில் மோதி விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த விபத்தில் சிக்கி நிகழ்விடத்திலேயே ராஜகோபால் (19) என்ற இளைஞர் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாம்பலம் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.