நீலகிரி: குன்னுார் சிம்ஸ் பூங்காவில் நூற்றுக்கணக்கான அரியவகை மரங்கள், மலர்ச் செடிகள் உள்ள நிலையில் சிறப்பாக பூங்கா பராமரிக்கப்பட்டு வருகிறது. அதில் பல வண்ணங்களிலான ரோஜா மலர்களும் அடங்கும். பூங்கா நீர்வாகக்தின் புதிய முயற்சியாக வெளியில் இருந்து கொண்டுவரப்பட்ட பச்சை ரோஜா கட்டிங் தொட்டியில் வளர்க்கப்பட்டு வருகிறது. இதனை பாதுகாப்புடன் வளர்த்து பூங்கா முழுவதிலும் நடவு செய்ய பூங்கா நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. பச்சை ரோஜாவை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டுக்களித்து செல்கின்றனர்.