நீர்வழிச் சாலை திட்ட தலைவர் பொறியாளர் ஏ.சி.காமராஜ் காலமானார்

73பார்த்தது
நீர்வழிச் சாலை திட்ட தலைவர் பொறியாளர் ஏ.சி.காமராஜ் காலமானார்
நவீன நீர்வழிச் சாலை திட்டத்தின் தலைவர் பொறியாளர் ஏ.சி.காமராஜ் காலமானார். மதுரையில் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்ட ஏ.சி.காமராஜ்க்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து காலமானார், அவருக்கு வயது 90. இந்தியாவில் உள்ள நதிகள் மற்றும் ஆறுகளை இணைக்க வேண்டும் என ஏ.சி.காமராஜ் பல்வேறு முயற்சிகளை மேற்க்கொண்டார். நதிகள் மற்றும் ஆறுகள் இணைப்பின் மூலம் புதிய நீர்வழி சாலைகளை உருவாக்கலாம் என தெரிவித்து இருந்தார். இவரது மறைவுக்கு அரசியல் கட்சியினர், பொதுமக்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி