உத்திரப் பிரதேச மாநிலத்தில் 60 வயதில் 28 வயது பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப் பிரதேச மாநிலம் பதோஹி மாவட்டத்தில் உள்ள பிஹாரோஜ்பூரைச் சேர்ந்த ராம் யாதவ் (60) என்பவர் அஷர்பி தேவியை (28) காதலித்து வந்துள்ளார். அஷர்பி தேவிக்கு ஏற்கனவே திருமணம் நடந்து இரண்டு குழந்தைகள் உள்ளது. இந்நிலையில், அஷர்பி தேவி தனது கணவரை விட்டுவிட்டு 60 வயதான ராம் யாதவுடன் திருமணம் செய்து கொண்டுள்ளார். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.