சேலம் அழகாபுரத்தை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு தொடர் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அச்சிறுமியின் தாயார் சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். மருத்துவ பரிசோதனையில் சிறுமி 3 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்துள்ளது. மருத்துவமனை நிர்வாகம் காவல்துறைக்கு புகாரளிக்க வீட்டில் தனியாக இருந்த தன்னிடம் 14 வயது சிறுவன் தவறாக நடந்துக் கொண்டதாக பாதிக்கப்பட்ட சிறுமி வாக்குமூலம் கொடுத்துள்ளார். காவல்துறை அச்சிறுவனை விசாரித்ததில் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதையடுத்து, சிறுவன் போக்சோவில் கைது செய்யப்பட்டான். மேலும், சிறுமிக்கு மரபணு சோதனை நடத்தப்பட உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.