பேருந்தில் தீ விபத்து.. 8 பேர் பலி, 24 பேர் காயம்!

15706பார்த்தது
ஹரியானா மாநிலம் நுஹ் பகுதியில் சுற்றுலா பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்தது. நேற்று (மே 17) வெள்ளிக்கிழமை இரவு 1.30 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 24 பேர் காயமடைந்துள்ளனர். மதுராவில் இருந்து ஜலந்தர் நோக்கி சென்ற இப்பேருந்தில் 60 பேர் பயணித்ததாக கூறப்படுகிறது. அவர்களில் பலர் மத யாத்திரையில் பங்கேற்றதாக தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சென்று மீட்பு பணிகளின் ஈடுபட்டனர். இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி