பாக்., தாக்குதலில் 8 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் காயம்

58பார்த்தது
பாக்., தாக்குதலில் 8 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் காயம்
பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில், ஜம்முவின் 7ஆவது படைப் பிரிவைச் சேர்ந்த 8 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காயமடைந்த 8 வீரர்களும் சத்வாரியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக, காஷ்மீரில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மராட்டிய ரெஜிமெண்ட்டைச் சேர்ந்த சிப்பாய் சச்சின் வனான்ஜி என்ற ராணுவ வீரர் வீரமரணம் அடைந்தார்.

தொடர்புடைய செய்தி