7ம் வகுப்பு மாணவிகள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

61பார்த்தது
7ம் வகுப்பு மாணவிகள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு
ஒடிசா மாநிலம் மல்கன்கிரி மாவட்டம் கலிபேலா பகுதியில் பள்ளிக்கூடம் உள்ளது. இந்த பள்ளியில் ஜோதி (13), மந்திரா (13) ஆகிய இரு சிறுமிகள் 7ம் வகுப்பு பயின்று வந்தனர். இதனிடையே, கடந்த வியாழக்கிழமை பள்ளி முடிந்து இருவரும் வீடு திரும்பவில்லை என போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில், கிராமத்திற்கு அருகே உள்ள வனப்பகுதியில் உள்ள மரத்தில் 2 மாணவிகளும் தூக்கில் தொங்கிய நிலையில் வெள்ளிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி