கரூர் மாவட்டம் கோடங்கிபட்டியைச் சேர்ந்த ஓட்டுநர் மாரியப்பன் (31) என்பவர், 2ஆம் வகுப்பு படிக்கும் 7 வயது சிறுமியை வீட்டுக்கு கடத்திச் சென்று பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த சிறுமியின் உறவினர்கள், ஓட்டுநரை சரமாரியாக தாக்கி போலீசில் ஒப்படைத்தனர். தொடர்ந்து, கரூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து மாரியப்பனை கைது செய்தனர்.