குஜராத்தில் கடந்த 2 ஆண்டுகளில் மாணவர்கள் வருகைப் பதிவு குறைவு காரணமாக 33 மாவட்டங்களில் உள்ள அரசின் 54 தொடக்கப்பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு சட்டப்பேரவையில் அறிவித்துள்ளது. மேலும், புதிய பள்ளிக் கூடங்கள் கட்டுவதற்கு போதிய இடமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மொத்தமுள்ள 32,000 பள்ளிகளில் 1,606 பள்ளிகள் வெறும் ஒரு ஆசிரியருடன் செயல்பட்டு வருகின்றன. மாணவர்களின் கல்வி எதிர்காலம் கேள்விக்குறியாகும் நிலையில் இருக்கிறது.