தென் அமெரிக்காவில் உள்ள பெரு நாட்டில் 5000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த கேரல் நாகரிகத்தைச் சேர்ந்த பெண்ணின் உடல் எச்சங்களை தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டெடுத்துள்ளனர். தலைநகர் லிமாவுக்கு வடக்கே உள்ள சூப் மாவட்டத்தில், ஆஸ்பெரோ பகுதியில் அகழாய்வு நடந்துள்ளது. அப்போது பெண்ணின் நகங்கள், முடி, தோல் பாகங்கள் பாதுகாக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டன. உயிரிழந்தபோது அப்பெண்ணுக்கு 20-35 வயதிருக்கலாம் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.