சளி, உயர் ரத்த அழுத்தம், ஜீரண மண்டல பாதிப்பு, உயிர்ச்சத்து குறைபாடு உள்ளிட்ட பிரச்னைகளுக்காக விற்பனை செய்யப்படும் 46 மருந்துகள் தரமற்றவை என மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அறிவிப்பு வெளியிட்டுள்ள மத்திய அரசு, நாட்டில் சளி, உயர் ரத்த அழுத்தம், ஜீரண மண்டல கோளாறுகள் உள்ளிட்ட பிரச்சனைகளுக்காக விற்பனை செய்யப்படும் 46 மருந்துகள் தரமற்றவை என கூறப்பட்டுள்ளது. இது பற்றிய கூடுதல் விவரங்களை http://cdsco.gov.in என்ற இளையதளத்தில் வெளியிட்டுள்ளது. மேலும், தரமற்ற மருத்துகளை உற்பத்தி செய்து, விற்பனைக்கு கொண்டு வந்துள்ள நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மருத்து தரக்கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்துள்ளது.