மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரை சேர்ந்த ஹேமலதா (34) என்ற பெண் கொரோனாவில் தனது கணவரை இழந்த நிலையில் அக்ஷய் (26) என்ற இளைஞருடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டது. இந்நிலையில் ஹேமலதா வேறு ஆண்களுடன் பேசுவதால் நடத்தையில் சந்தேகப்பட்ட அக்ஷய் அவருடன் சண்டை போட்டார். இந்நிலையில் இது தொடர்பான பிரச்சனையில் இரும்பு கம்பியால் ஹேமலதாவை அடித்து அக்ஷய் கொலை செய்தார். போலீசார் குற்றவாளியை கைது செய்த நிலையில் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார்.