30 மணி நேரம் ஆண்குறி விறைப்புத்தன்மையுடன் போராடிய இளைஞருக்கு ரூ.44 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. ஸ்பெயினின் வலென்சியாவைச் சேர்ந்த 36 வயது நபர் பிரியாபிசம் (விறைப்புத்தன்மை பிரச்சனை) அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை. மருத்துவர்களின் அலட்சியத்தால் அறுவை சிகிச்சையில் சிக்கல் ஏற்பட்டு, பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டது. 2020-ல் நடந்த இந்த சம்பவத்தை தொடர்ந்து 4 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது இளைஞருக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.