தமிழகத்தில் நாளை (ஜன.3) முதல் ஞாயிற்று கிழமை வரை மூன்று நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “ஜன.03 முதல் ஜன.05 வரை வார விடுமுறை நாட்களை இருப்பதால் அதனை முன்னிட்டு சென்னையிலிருந்தும், இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் சொந்த ஊர்களுக்குச் செல்ல 245 பேருந்திகள் இயக்கப்படவுள்ளன” என குறிப்பிடப்பட்டுள்ளது.