தமிழக அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் செயல்படும் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் 20வது உதகை ரோஜா கண்காட்சி இன்று (மே 10) தொடங்குகிறது. இந்த காட்சி வருகிற 12ஆம் தேதி வரை நடக்கிறது. நீலகிரி மாவட்டம் உதகையில் அமைந்துள்ள அரசு ரோஜா பூங்காவில் ரோஜா மலர்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. கோடை விடுமுறை காரணமாக குடும்பம் குடும்பமாக சுற்றுலா பயணிகள் உதகைக்கு படையெடுத்து வரும் நிலையில், இந்த கண்காட்சி விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.