உ.பி: மகாராஜ்கஞ்ச் மாவட்டம் ஹர்திதாலி கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் 20-க்கும் மேற்பட்ட பாம்புகள் சுருண்டு கிடக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனைக்கண்டு பயத்தின் உச்சத்திற்கே சென்ற அப்பகுதி மக்கள், உடனடியாக போலீசாருக்கும் வனத்துறைக்கும் தகவல் அளித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அதிகாரிகள் பாம்பினை பிடித்துச் சென்றனர். இது மிக அரிதானதொரு காட்சி என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.