பாகிஸ்தான் தாக்குதலில் காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் 2 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர் என்று வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி கூறியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த விக்ரம் மிஸ்ரி, "கன்னியாஸ்திரீகள் நடத்தி வரும் கிறிஸ்தவ பள்ளியைச் சேர்ந்த 2 மாணவர்கள் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். குழந்தைகளின் பெற்றோர் காயமடைந்துள்ளனர் "என்று தெரிவித்துள்ளார்.