140 கிலோ கஞ்சா பறிமுதல்.. 5 பேர் கைது

84பார்த்தது
140 கிலோ கஞ்சா பறிமுதல்.. 5 பேர் கைது
பெரம்பலூர், குன்னம் அருகே காரில் கடத்தி செல்லப்பட்ட 140 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் 5 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். திருட்டு காரில் கடத்திய நிலையில் காரின் உரிமையாளர், ஜிபிஎஸ் அடிப்படையில் தகவல் தெரிவித்த நிலையில் போலீசார் அவர்களை மடக்கி பிடித்தனர். 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தப்பியோடிய மேலும் ஒருவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் கஞ்சா புழக்கம் அதிகரித்து வருவதால் போலீசார் தீவிர சோதனையில் ஈடுப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி