தேச பாதுகாப்பை கருதி, சில நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் அமெரிக்காவுக்குள் நுழைய அதிபர் ட்ரம்ப் தடை விதித்துள்ளார். ஆப்கானிஸ்தான், ஈரான், ஏமன், மியான்மர், காங்கோ, லிபியா, சோமாலியா, சூடான் உள்ளிட்ட 12 நாடுகளுக்கு முழுமையான தடையும், கியூபா, லாவோஸ், துர்க்மெனிஸ்தான், வெனிசுலா உட்பட 7 நாடுகளுக்கு பகுதியளவு தடையும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறை வரும் 9-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.