தமிழகம் முழுவதும் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை (மார்ச் 28) தொடங்கி அடுத்த மாதம் ஏப்.15ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த தேர்வை மொத்தம் 9,13,036 பேர் எழுத இருக்கிறார்கள். மாணவர்கள் காப்பி அடித்தல், துண்டு சீட்டு வைத்து எழுதுதல், விடைத்தாள் மாற்றம் செய்தல் போன்ற ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்வுத்துறை எச்சரித்துள்ளது. மேலும், தேர்வு பணிகளில் ஈடுபடக்கூடிய ஆசிரியர்கள் மாணவர்கள் பார்த்து எழுதுவதற்கு துணை போகக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.