தமிழ்நாடு, புதுச்சேரியில், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 9 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் எழுதினர். இதற்கான தேர்வு
முடிவுகள் இன்று காலை வெளியாகின. தமிழ்நாட்டில் 91.39 சதவிகிதம் மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 4,30,710 பேரும், மாணவர்கள் 4,04,904 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 3,718 பள்ளிகளில் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ் பாடத்தில் ஒருவர் கூட 100-க்கு 100 மதிப்பெண் பெறவில்லை. பெரம்பலூர் - 97.67%, சிவகங்கை 97.53 %, விருதுநகர் - 96.22% என 3 மாவட்டங்களும் முதல் 3 இடங்களை பிடித்துள்ளன.