தமிழக விவசாயிகளுக்கு 1.81 லட்சம் இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து வரும் அவர், தமிழ்நாட்டில் இருபோக சாகுபடி பரப்பு 33.60 லட்சம் ஏக்கராக உள்ளது. கேழ்வரகு உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. மண்ணுயிர் திட்டத்தின் கீழ் 21.31 லட்சம் விவசாயிகள் பயன்பெற்றுள்ளதாக கூறியுள்ளார்.