சிவகாசியில் அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த அப்துல் ஜூலில்-அஷ்மா காத்துன் தம்பதி, வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ள நிலையில், 5வது முறையாக கர்ப்பமான அஷ்மா காத்துன், வீட்டில் பிரசவம் பார்த்துள்ளார். பெண் குழந்தை பிறந்துள்ளது.கிராம சுகாதார செவிலியர் கிரேஸ், வீட்டில் நடந்த பிரசவத்தை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்தது போல் தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் விசாரித்து, செவிலியர் கிரேஸை பணியிடை நீக்கம் செய்ய பரிந்துரை செய்துள்ளனர்.