விருதுநகர்: சட்டவிரோதமாக லாட்டரி சீட்டு விற்பனை செய்தவர் கைது

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் கேசவன் இவர் சாத்தூர் தேவி ஸ்டூடியோ அருகே ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது அங்கு கிருஷ்ணன் என்பவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை செல்போன் மூலம் விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. 

அவரை கைது செய்த காவல்துறையினர் செல்போன் பயன்படுத்திய லாட்டரி சீட்டு எண்கள் மற்றும் லாட்டரி விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட மொபைல் போன், லாட்டரி விற்பனை செய்த பணம் ரூ.52,500 ஆகியவற்றை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி