சாத்தூர்: காதல் திருமணம்..கடைசியில் நடந்த சோகம்

சாத்தூர் அருகே விஷம் குடித்து டிரைவர் எட்வின் இருதயராஜ் (27) உயிரிழந்தார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜோதி (23) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மனவேதனை அடைந்த இவர், வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சாத்தூர் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி