அருப்புக்கோட்டையில் நல்லூர் ஜமாத்திற்கு கடந்த ஆறு ஆண்டுகளாக தேர்தல் நடத்தப்படாததை கண்டித்தும், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி உடனடியாக தேர்தல் நடத்த வலியுறுத்தியும், தமிழ்நாடு வக்பு வாரியத்தை கண்டித்தும் நல்லூர் ஜமாத் பொதுமக்கள் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு கையெழுத்திட்டனர். தேர்தல் நடத்தப்படாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.