விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே செட்டிகுறிச்சி கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், முன்னாள் ராணுவ வீரர் மணிகண்டன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். கிராமத்தில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக இருப்பதாகவும், அவற்றை அகற்ற இரண்டு ஆண்டுகளாகப் போராடி வருவதாகவும், அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காததால் மன விரக்தி அடைந்துள்ளதாகவும் அவர் கூறினார். மேலும், சட்டவிரோத மது விற்பனை குறித்தும், புகார் அளிக்கச் சென்றால் நடத்தப்படும் விதம் குறித்தும் அவர் வேதனை தெரிவித்தார்.