கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் மருத்துவர் தெருவைச் சேர்ந்த ராமானுஜம் மகன் செல்வராஜ் (55). தொழிலாளி. இவர், பணி நிமித்தமாக விழுப்புரத்துக்குச் சென்றுவிட்டு, செஞ்சி நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தாராம். அப்போது, அயனம்பாளையம் பகுதியில் அவர் சாலையைக் கடக்க முயன்றபோது, ஆட்டோ மோதியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.