உத்தரப் பிரதேசம்: சிஹோரா கிராமத்தில் காதலனை சந்திக்க அவரது வீட்டிற்குச் சென்ற ஒரு இளம் பெண்ணை அவரது குடும்பத்தினர் கொடூரமாக தாக்கி, சாலையில் தலைமுடியைப் பிடித்து இழுத்துச் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த நேரத்தில், அப்பெண், "என்னை அடிக்காதீர்கள் நான் அவனை நேசிக்கிறேன்!" என்று கத்துவது கேட்கிறது! இந்த கொடூரமான காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.