நூலகத்தின் முகப்பு பகுதியில் அமைந்துள்ள சுற்றுச்சுவர், கேட் சேதமடைந்து காணப்படுகின்றன. ஜன்னல் கண்ணாடிகள் சமூக விரோதிகளால் உடைக்கப்பட்டுள்ளன. நுழைவு பகுதியில் அமைந்துள்ள பெயர் பலகையில் வேலூர் மாவட்ட கிளை நூலகம் என்றும், மற்றொரு பக்கத்தில் வட ஆற்காடு மாவட்ட கிளை நூலகம் என்றும் உள்ளது. வேலூர் மாவட்டத்தில் இருந்து ராணிப்பேட்டை தனி மாவட்டமாக பிரித்து 6 ஆண்டுகள் ஆகும் நிலையில் மாவட்ட பெயர் மாற்றப்படாமல் இருப்பது வாசகர்கள், மாணவர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே இதுகுறித்து நூலக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தாய் பால் குடித்த குழந்தை பரிதாப மரணம்