அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் வழக்குப்பதிந்து கண்காணிப்பு கேமராக்களை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். அதில் வேலூர் தோட்டப்பாளையத்தை சேர்ந்த சரவணபாபு (42), திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்த முனியாண்டி (38), விஜயசந்த் (30) மற்றும் களம்பூரை சேர்ந்த தட்சிணாமூர்த்தி (39) ஆகிய 4 பேரும் மினிவேனில் பசுமாடுகளை கடத்திச் சென்றது தெரியவந்தது.
இந்த நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியவாணி மற்றும் போலீசார் நேற்று சரவணபாபு உள்பட 4 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 பசுமாடுகளும் மீட்கப்பட்டன.