கடந்த 2020ல் கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா- சீன படைகள் மோதிக்கொண்ட பின்னர், இருநாடுகளுக்கும் இடையே உறவுகள் கடுமையாக பாதித்தன. தற்போது, இந்தியா மீது அமெரிக்கா கூடுதல் வரி விதித்துள்ளது உலகளாவிய அளவில் விவாதமாகியுள்ளது. இதனிடையே, சமீபத்தில் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி டெல்லி வந்தார். இருதரப்பு பேச்சுவார்த்தையும் நடைபெற்றது. இந்தியாவுக்கு உறுதுணையாக இருப்பதாகவும் சீன அமைச்சர் குறிப்பிட்டு இருந்தார்.
Thanks: MoHA