மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (செப்., 11) தமிழகத்தின் சில மாவட்டங்களில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடலூர், கோவை, விழுப்புரம், புதுக்கோட்டை, வேலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ஈரோடு, சேலம், தர்மபுரி, சென்னை, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, திருப்பூர், பெரம்பலூர், விருதுநகர், கள்ளக்குறிச்சி, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படவுள்ளது.