மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (அக்.06) தமிழகத்தின் சில மாவட்டங்களில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூர், திருச்சி, திண்டுக்கல், மயிலாடுதுறை, சிவகங்கை, சென்னை, கிருஷ்ணகிரி, தஞ்சாவூர், தென்காசி, வேலூர், விழுப்புரம், கோவை, நாகை, விருதுநகர், திருப்பத்தூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, ஈரோடு, புதுச்சேரி, காரைக்காலில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும்.