உடுமலை: 17 நாட்களுக்குப் பின் அருவியில் குளிக்க அனுமதி

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பஞ்சலிங்க அருவிப் பகுதியில் கனமழை காரணமாக கடந்த 18ஆம் தேதி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அருவிக்குச் செல்லும் இரும்புப் பாலம் சேதமடைந்தது. தற்போது பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்த நிலையில், 17 நாட்களுக்குப் பிறகு இன்று (நவ.5) சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி