திருப்பூர் மாவட்டம் உடுமலை கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாளை காலை 11 மணியளவில் உடுமலை செயற்பொறியாளர் அலுவலகத்தில் மேற்பார்வை பொறியாளர் கீதா தலைமையில் நடைபெற உள்ளது. இதில் உடுமலை மற்றும் சுற்றுவட்டார பகுதி மின் நுகர்வோர் தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என செயற்பொறியாளர் மூர்த்தி விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.