கோவை - ராஜஸ்தான் மாநிலம் மதார் இடையே சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் வியாழன், 13ம் தேதி முதல் டிசம்பர் 4ம் தேதி வரை இயக்கப்படும் இந்த ரயில், அதிகாலை 2:30 மணிக்கு கோவையில் புறப்பட்டு சனிக்கிழமை காலை 11:20 மணிக்கு ராஜஸ்தான் சென்றடையும். திருப்பூருக்கு வியாழன் அதிகாலை, 3:13 மணிக்கு வந்து சேரும். மறுமார்க்கத்தில் ஞாயிறு இரவு 11:50 மணிக்கு புறப்பட்டு, புதன் காலை 8:30 மணிக்கு கோவை வந்தடையும் இந்த ரயில் டிச. 7ம் தேதி வரை இயக்கப்படும்.