திருப்பூர் வாவிபாளையம் பகுதியைச் சேர்ந்த மாரியம்மாள் (33), முதல் கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து, இரண்டாவது கணவர் இசக்கிமுத்துவுடன் வசித்து வந்தார். இசக்கிமுத்துவுடனும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மனமுடைந்த மாரியம்மாள் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். திருமுருகன்பூண்டி போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.