திருப்பூர்: ரூ.25 லட்சத்திற்கு நிலக்கடலை ஏலம்

சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நேற்று நடைபெற்ற ஏலத்தில் சுமார் 96 விவசாயிகள் கலந்துகொண்டு 961 மூட்டை நிலக்கடலையை ஏலத்திற்கு கொண்டுவந்திருந்தனர். 

இதில் திருப்பூர் மற்றும் ஈரோடு சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள் கலந்துகொண்டு மறைமுக ஏலத்தின் வாயிலாக குவிண்டால் ஒன்றுக்கு முதல் ரக நிலக்கடலை ரூ.6,800 முதல் ரூ.7,056 வரையிலும், இரண்டாம் ரக நிலக்கடலை ரூ.6,250 முதல் ரூ.6,750 வரையிலும், மூன்றாம் ரக நிலக்கடலை ரூ.5,050 முதல் ரூ.6,200 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.25.12 லட்சத்திற்கு ஏலம் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி