இதில் கரூரைச் சேர்ந்த இன்ஜினியர் பழனிவேலு (வயது 32) என்பவருக்குச் சொந்தமான கட்டுமான அலுவலகம் உள்ளது. நேற்று (டிசம்பர் 26) வழக்கம்போல் அவர் அலுவலகத்தை பூட்டிவிட்டுச் சென்றார். இந்த நிலையில் மர்ம நபர்கள் அவரது அலுவலக பூட்டை உடைத்து லேப்டாப்பை திருடிச் சென்றுவிட்டனர்.
இதேபோன்று அந்த வணிக வளாகத்தில் டெய்லர் கடை நடத்திவரும் அமுதா என்பவரது கடை மற்றும் வழக்கறிஞர் ஆனந்த் அலுவலக பூட்டுகள் உடைக்கப்பட்டு கொள்ளை முயற்சி நடந்துள்ளது. இதுகுறித்து பழனிவேலு செசன்ஸ் கோர்ட் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.