திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள அய்யம்பட்டி தொண்டமான்பட்டியை சேர்ந்தவர் புட்டர் ஞானப்பிரகாசம். இவரது மகன் டேவிட் ராஜ் இவர் திருச்சி பகுதியில் உள்ள தனியார் சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து வீட்டிற்கு திரும்பும் போது எழில் நகர் உய்கொண்டான் கரையில் பைக் சென்றபோது ரோட்டில் படுத்துக் கிடந்த மாட்டின் மீது பைக் மோதி விபத்துக்குள்ளானது. இதில் டேவிட்ராஜ் பலத்த காயமடைந்தார். அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி டேவிட்ராஜ் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து திருவரம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.