தூத்துக்குடி மாவட்டத்தின் தொல்லியல் களமான பட்டினமருதூரில், சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான சுடுமண் பெண் தெய்வ சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. 5.4 செ.மீ உயரமுள்ள இந்த சிலை, ஐம்பெரும் காப்பியங்களில் குறிப்பிடப்படும் சம்பாபதி அம்மன் உருவத்தைப் போல் இருப்பதாக தொல்லியல் ஆர்வலர் பெ. ராஜேஷ் செல்வரதி தெரிவித்துள்ளார். மேலும், சங்ககால தொல் தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்ட, முக்கோண வடிவ வாய்ச்சி கருவியும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.