தூத்துக்குடி மாவட்டம் தெய்வச் செயல்புரம் கிராமத்தைச் சேர்ந்த 45 வயது பெண்ணை காட்டுப்பகுதிக்கு தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக ஆறுமுகமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவர் புதுக்கோட்டை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இதனை கண்டித்து, குற்றவாளிக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என தெய்வச் செயல்புரம் கிராமத்தில் இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.